இந்தியா
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை
பெங்களுருவைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை 2026 என்ற அறிக்கையில் அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
இதன்படி இந்தியாவில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் சுமார் 39 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். 25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் சுமார் 20 சதவீதம் பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2023 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 6.30 கோடி பட்டதாரிகளில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 1.10 கோடி பேர் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டப்படிப்ப முடித்து ஓராண்டுக்குள் வெறும் 7 சதவீத ஆண்களுக்கு மட்டுமே நிரந்தர சம்பளம் கிடைக்கும் வேலை அமைந்திருப்பதாகவும் ஒயிட் காலர் எனப்படும் உயர்தர அலுவலக வேலைகள் 3.7 சதவிதம் இளைஞர்களுக்கு மட்டுமே கிடைப்பதாகவும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பட்டதாரிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்தாலும் அது தற்காலிகமானது அல்லது குறைந்த வருமானம் தரும் வேலைகளாக இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் 2017 முதல் 2024 வரையிலான காலத்தில் உயர்கல்வி படிக்கும் இளம் ஆண்களின் எண்ணிக்கை 38 சதவீத்த்திலிருந்து 34 சதவீதமாக குறைந்துள்ளது. குடும்ப வருமானத்துக்காக இளைஞர்களில் 72 சதவிதம் பேர் படிப்பை பாதியில் நிறுத்துவதாக சொல்லப்பட்டிருக்கிறது.
கல்விக்கும் வேலைக்குமான இடைவெளி அதிகரிப்பதால் இந்த வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இளைய தலைமுறைதான் நாட்டின் மிகப்பெரிய பலம். ஆனால் சமீபத்திய இந்த ஆய்வு முடிவுகள் அந்த பலம் வீணாகி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
வெறும் பட்டப்படிப்ப சான்றிதழ்கள் மட்டும் வேலைவாய்ப்பை உறுதி செய்யாது என்பதை உணர்ந்து கல்வி முறையில் மாற்றங்களையும் தொழில்முறை திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இளைஞர்களின் உழைப்ப விணாகாமல் தடுப்பதே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும்.












