உலகம்
இனிதான் ஆட்டம்.. எல்லோரும் சேர்ந்துவிட்டோம்.. மமதாவை கடிதம் அனுப்பிய ராகுல்

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் அழைப்பின் பேரில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பெரிய மாநாடு ஒன்றை நாளை நடத்த இருக்கிறார். இதற்கு ஐக்கிய இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பாஜக கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல இதில் ஒன்று சேர்க்கிறது. 90 சதவிகித கட்சிகள் நாளை இந்த ஆலோசனையில் கலந்து கொள்ளபோகிறது. லோக் சபா தேர்தல் கூட்டணி குறித்து இதில் விவாதிக்க உள்ளனர்.
இந்த ஆலோசனையில், திமுக தலைவர் ஸ்டாலின். மஜத தேசிய தலைவர் தேவ கவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் எம்பி யஷ்வந்த் சின்கா, ஆர்எல்டி தலைவர் அஜித் சிங், தேசிய கான்பிரன்ஸ் தலைவர் பருக் அப்துல்லா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜகவை சேர்ந்த அதிர்ச்சி தலைவர் சத்ருகன் சின்கா, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஆர்ஜெடியின் தேஜேஷ்வி யாதவ், படிதார் ஜாதி இனத்தின் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.




















