Connect with us

இந்தியா

தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி ராஜினாமா செய்வாரா?

Published

on

17-வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜகவே தனித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

பாஜக கூட்டணி இதுவரை 345 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி தனித்து 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்வி தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையகத்தில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டு மக்கள் தங்கள் முடிவை தெளிவாகத் தெரிவித்துள்ளார்கள். மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்றேன். அதுதான் நடந்துள்ளது. மோடிக்கும், பாஜகவுக்கும் எனது வாழ்த்துகள். எது தவறாக போனது என்பதை விவாதிக்க வேண்டிய நேரம் இது இல்லை.

அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் காந்தி பின்னடைவைச் சந்தித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பிய கேள்விக்கு, என்னை தோற்கடித்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணிக்கு எனது வாழ்த்துகள் என்றார். தொடர்ந்து தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல், அதை காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு செய்யும் என்றார்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?