கிரிக்கெட்
கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு கைமாற்றியது ஏன்? தோனியின் அபார வியூகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி விட்டார் என்றும் ஜடேஜா புதிய கேப்டனாக செயல்படுவார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்தது .
இந்த நிலையில் தோனியின் இந்த முடிவு எதற்காக என்ற கேள்வி எழுந்த நிலையில் டோனியின் வியூகம் குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. முக்கியமாக தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் இருக்கும் போதே ஒரு கேப்டனை உருவாக்கி பயிற்சி அளிக்க வேண்டும் என்றுதான் ஜடேஜாவுக்கு அவர் கேப்டன் பதவியை அளித்து உள்ளார் என்றும் அவர் கேப்டன் பதவியில் செயல்படுவதை அருகில் இருந்து கவனித்து அதில் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்து ஒரு முழுமையான கேப்டனை உருவாக்கி விட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த ஆண்டு கேப்டன் பதவியை அவர் ஜடேஜாவுக்கு தாரைவார்த்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அந்த அணி மிகச் சிறந்த அணியாகவும் ஒரு மிகச் சிறந்த ஒரு கேப்டன் உடன் இருக்க வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் தோனி வியூகம் அமைத்து இந்த கேப்டன் பதவியை கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.