கிரிக்கெட்
தொடங்கியது இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி… அணியில் அஸ்வினை விராட் விலக்கியது ஏன்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கி உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது பந்துவீசி வருகிறது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுக்கு சமீபத்தில் பயிற்சியின் போது தலையில் அடிபட்டதால் அவருக்குப் பதில் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயல்நாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் அஸ்வினை கோலி இன்றைய போட்டியில் சேர்க்கவில்லை. இது பெரும் விவாதம் ஆகி உள்ளது. சர்வதேச டெஸ்ட் என்றாலே அஸ்வின் பந்துவீச்சில் கலக்குவார். இந்த சூழலில் அஸ்வினுக்கு பதில் கோலி வேகப்பந்து வீச்சாளர் தாக்கூரை களம் இறக்கி உள்ளார்.
குறிப்பாக, சர்வதேச சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் அஸ்வின் உள்ளார். இதனாலே, அஸ்வினை கோலி களம் இறக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து அணி தற்போது முதல் இன்னிங்க்ஸ்-ல் 41.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.