Connect with us

கிரிக்கெட்

தொடங்கியது இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி… அணியில் அஸ்வினை விராட் விலக்கியது ஏன்?

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கி உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது பந்துவீசி வருகிறது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுக்கு சமீபத்தில் பயிற்சியின் போது தலையில் அடிபட்டதால் அவருக்குப் பதில் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அயல்நாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் அஸ்வினை கோலி இன்றைய போட்டியில் சேர்க்கவில்லை. இது பெரும் விவாதம் ஆகி உள்ளது. சர்வதேச டெஸ்ட் என்றாலே அஸ்வின் பந்துவீச்சில் கலக்குவார். இந்த சூழலில் அஸ்வினுக்கு பதில் கோலி வேகப்பந்து வீச்சாளர் தாக்கூரை களம் இறக்கி உள்ளார்.

குறிப்பாக, சர்வதேச சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் அஸ்வின் உள்ளார். இதனாலே, அஸ்வினை கோலி களம் இறக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இங்கிலாந்து அணி தற்போது முதல் இன்னிங்க்ஸ்-ல் 41.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?