வணிகம்
2009-ம் ஆண்டு பிட்காயினில் ₹2 முதலீடு செய்திருந்தால் இப்போது அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி என்றால் அது பிட்காயின் (Bitcoin) தான். இந்த பிட்காயினில் 2009-ம் ஆண்டு ₹2 மட்டும் முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு என்ன என்பதைப் பற்றிய தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 2009-ம் ஆண்டு ₹2 முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு $116,906.22, அதாவது ₹1,00,36,400 ரூபாய் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு, ஒரு பிட்காயின் மதிப்பு ₹2.25 மட்டுமே இருந்தது. அதன்படி, ₹100 முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு சுமார் ₹44 கோடி ஆகும்.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீட்டின் சக்தியை இந்த பதிவு நன்கு எடுத்துக்காட்டுகிறது.




















