வணிகம்
இந்தியாவில் MSME நிறுவனங்கள் மூடல் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு! தமிழ்நாட்டிலும் கடுமையான பாதிப்பு!

2025 பிப்ரவரி மாதத்துக்குள், இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) எனப்படும் நிறுவனங்களில் 35,567 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இரட்டிப்பாக உள்ளது.
முக்கியமாக, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மிக அதிகமான MSME மூடலுகள் பதிவாகியுள்ளன.
இதற்கு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள், மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் திறன் வாய்ப்பு குறைபாடுகள் காரணம் என கூறப்படுகிறது.
2020 முதல் இதுவரை 75,000-க்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறது.
தொழில் வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய, அரசு விரைவாக கொள்கைகள் செயல்படுத்த வேண்டும். அதேசமயம் அனுமதி சிக்கல்கள், ஆட்கள் பற்றாக்குறை போன்றவை நீக்கப்பட்டு MSME நிறுவனங்களுக்கு தேவையான புதிய நிதி ஆதரவு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகம் ஆனதன் முதலே சிறு குறு நிறுவனங்க பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.




















