Connect with us

தமிழ்நாடு

இது மீம்ஸ் அல்ல! உண்மையில் ‘சிங்கம்’ படத்தில் சொன்னது: விவேக் டுவீட்

Published

on

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டதை அடுத்து வெயில் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் வெயில் மண்டையைப் பிளக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு வெயிலின் கொடூரத்தை இருந்து தப்பிக்க ஒரே வழி மர நிழல்தான் என்பதும் அதனால் தான் மரங்களை வளர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மரம் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் விவேக் கூறி வருகிறார் என்பதும் ஒரு கோடி மரங்கள் நடவேண்டும் என்ற இலக்கை தான் வைத்திருப்பதாக பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். மேலும் இதனை அவர் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் இடம் உறுதி அளித்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மரம் வளர்ப்பது குறித்து அவர் இன்று பதிவு செய்த டுவிட்டில், ‘சிங்கம் என்ற படத்தில் ஒரு வசனம் வரும். தமிழ்நாட்டில் மூன்றே மூன்று கிளைமேட் தான், நல்லா வெயில் அடிக்கும், பயங்கரமாக வெயில் அடிக்கும், கொடூரமாக வெயில் அடிக்கும்’ என்ற வசனத்தை குறிப்பிட்டு, இந்த வசனம் உண்மையில் மீம்ஸ் அல்ல, உண்மை நிலவரம் தான். இந்த நிலை மாறவேண்டும் என்றால் மரம் வளர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?