உலகம்
ஆலமரத்தை கட்டிப்பிடித்து நிர்வாண புகைப்படம் எடுத்த பிரபல பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்
உள்ளூர் மக்கள் புனிதமாக கருதப்படும் ஆலமரத்தை கட்டிப்பிடித்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பிரபல பெண் ஒருவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அலியா என்பவர் தனது கணவருடன் இந்தோனேசியத் தீவுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்றார். அங்கு பாலி என்ற தீவில் கணவருடன் சுற்றுப்பயணம் சென்றபோது அங்கிருந்த 700 ஆண்டு பழமையான ஆல மரத்தை பார்த்தார். அதனை சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்த அலினா அதன்பின் நிர்வாணமாக நின்றுகொண்டு புகைப்படம் எடுத்தார் .
இந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவான நிலையை பார்த்த அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் மிகவும் புனிதமான அந்த ஆலமரத்தில் நிர்வாணமாக புகைப்படம் எடுப்பதா? என்று குற்றஞ்சாட்டினர் .
இதனை அடுத்து இந்தோனேசிய அரசு அலினா மற்றும் அவரது கணவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இந்த நிலையில் தனது செயலுக்கு அலினா மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு புனிதமான இடம் இருக்கும், ஆனால் இந்த ஆலமரம் புனிதமானது என்று தனக்கு தெரியாது என்றும் தனது செயலுக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.