Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் மீது விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் வழக்கு!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மகாநதி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தான் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றிருந்தபோது பெங்களூர் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்ததாகவும் அப்போது அவரை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றபோது அவருடைய மேனேஜர் தன்னை இழிவுபடுத்தி, தனது சாதி குறித்து தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தன்னை அவருடைய மேனேஜர் ஜான்சன் தாக்கியது மட்டுமில்லாமல் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என்றும் நடிகர் மகாநதி அந்த மனுவில் கூறியுள்ளார்.

திரைத்துறையில் உள்ள ஒரு நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கியதோடு உண்மைக்குப் புறம்பாக செய்தி ஆக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது ஜான்சன் அவரது மேலாளர் ஜான்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சைதாப்பேட்டை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நாளை மறுதினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?