Connect with us

தமிழ்நாடு

இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை – தமிழக அரசு அறிவிப்பு

Published

on

 

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் மக்களை தயார் படுத்தும் விதமாக அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும் அறிவித்திருந்தது

இந்த நிலையில் இன்றும் நாளையும் 24 மணி நேரம் பேருந்து சேவையும் இருக்குமென தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இன்றும் நாளையும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது

இன்று 9 மணி வரை கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வசதியாக பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கின்போது 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது, ஞாயிறு அன்று முழு அளவில் பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால் மே 10 முதல் முழு ஊரடங்கு என்பதால் மக்களுடைய தேவையை கருதி இன்றும் நாளையு முழு அளவில் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்றும், இதைப் பயன்படுத்தி மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கோ அல்லது தேவைக்கேற்ப எந்த பயணம் வேண்டுமென்ராலும் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன்பின் 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு எந்தவித அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?