தமிழ்நாடு
இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் மக்களை தயார் படுத்தும் விதமாக அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும் அறிவித்திருந்தது
இந்த நிலையில் இன்றும் நாளையும் 24 மணி நேரம் பேருந்து சேவையும் இருக்குமென தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இன்றும் நாளையும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது
இன்று 9 மணி வரை கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வசதியாக பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கின்போது 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது, ஞாயிறு அன்று முழு அளவில் பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால் மே 10 முதல் முழு ஊரடங்கு என்பதால் மக்களுடைய தேவையை கருதி இன்றும் நாளையு முழு அளவில் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்றும், இதைப் பயன்படுத்தி மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கோ அல்லது தேவைக்கேற்ப எந்த பயணம் வேண்டுமென்ராலும் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன்பின் 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு எந்தவித அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.