செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் ஓர் பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமையால் தொடரும் அவலம்

திருப்பூர் மாநகரில் உள்ள பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பிரீத்தி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே பேசி வைத்தார் போல், பிரீத்தியின் கணவருக்கு 120 சவரப்ன் , 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை வரதட்சணையாக தரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் சில நாட்களில் பெண்ணின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ. 50 லட்சத்தை கேட்டு பிரீத்தியின் மாமனார், மாமியார் அவரை கொடுமை படுத்தியாக கூறப்படுகிறது.
இதனால் மணமுடைந்த பிரீத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பிரீத்தியின் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தை சேர்ந்த பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
























