இந்தியா
பேசவும் நடக்கவும் முடியாதவர் எழுந்து பேசினார்: கோவிஷீல்டு செய்த அற்புதம்!

கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசவும் நடக்கவும் முடியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதும் எழுந்து நடக்கத் தொடங்கியதும், சில வார்த்தைகள் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் புகாரா என்ற கிராமத்தில் நடக்க முடியாத மற்றும் பேசும் திறனை இழந்த 55 வயது நபர் ஒருவர் சமீபத்தில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டார். தடுப்பூசி போட்ட மறுதினமே அவர் நடக்கவும் பேசவும் கூடிய திறனை பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்த நபர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்து காரணமாக பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை அவரது வீட்டிற்கே வந்து முதல் தவணையை மருத்துவர் ஒருவர் செலுத்தி உள்ளார்.
கோவிஷீல்டு தடுப்பு ஊசி செலுத்தி அடுத்த நாளே அவர் எழுந்து நிற்கவும் சில வார்த்தைகளை பேசவும் செய்ததைப் பார்த்து அவரது உறவினர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். இதனை அவருக்கு ரெகுலராக சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்.
இந்த அதிசயமான அற்புதமான நிகழ்வு குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பேசவும் நடக்கவும் முடியாதவரை எழுந்து பேச வைக்கும் திறன் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உண்மையிலேயே உண்டா? என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


















