சினிமா
’பொன்னியின் செல்வன்2’ முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

‘பொன்னியின் செல்வன்2’ படத்தின் முதல் சிங்கிள் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதை மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமானது. நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஐஷ்வர்யாராய், ஜெயம் ரவி, த்ரிஷா, ஜெயராம் எனப் பலரது நடிப்பில் கடந்த வருடம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இதன் புரோமோஷன் பணிகளை படக்குழு தற்போது முழு வீச்சில் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில், தற்போது படத்தில் இருந்து முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. படத்தில் இளவரசி குந்தவை கதாபாத்திரத்திற்காக நடிகை த்ரிஷா தயாராகும் வீடியோவை வெளியிட்டு, இரண்டாம் பாகத்தில் இருந்து முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்பதையும் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. முதல் பாகத்தைப் போலவே பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடத்தப்படுமா, படக்குழு பான் இந்தியா டூர் போகுமா என்பது குறித்தான அடுத்தடுத்த அப்டேட்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.