Connect with us

இந்தியா

மாணவியை கற்பழித்து கொலை செய்த கல்லூரி முதல்வர்: கொடூர சம்பவம்!

Published

on

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனியார் ஜூனியர் கல்லூரியின் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கி பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

#image_title

இந்நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து போலீசார் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அந்த கல்லூரியின் முதல்வராக இருக்கும் ரமேஷ் தான் மாணவி தங்கியிருக்கும் விடுதியின் காப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் அடிக்கடி அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கல்லூரி முதல்வரின் பாலியல் தொல்லையால், தனது படிப்பை வேறு கல்லூரியில் தொடர மாணவி முடிவெடுத்திருந்து நிலையில், மீண்டும் தனது அறைக்கு மாணவியை வரவழைத்துள்ளார் ரமேஷ். அப்போது மாணவியை பலவந்தமாக கற்பழித்துள்ளார் அவர். இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க கற்பழித்த மாணவியை கொலை செய்து, அவரது அறைக்கு கொண்டு சென்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

இதனையடுத்து தலைமறைவான கல்லூரி முதல்வர் ரமேஷை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவியை அந்த கல்லூரியின் முதல்வரே கற்பழித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?