இந்தியா
கருணாநிதி ஆட்சியை கலைத்த காங்கிரஸ்: திமுகவை பார்த்து கூறிய மோடி!
கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் எதிரொலித்து வருகின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பாஜகவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் தொடர் கோஷங்களுக்கு மத்தியில் அவர்களை விமர்சித்து பேசினார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றவர்களின் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ். இதனால் எம்.ஜி.ஆர் ஆன்மா வருத்தத்தில் இருக்கும். 386 சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது.
சரத் பவாரின் அரசும் கவிழ்ந்தது. என்.டி.ஆர் அரசாங்கத்தை கவிழ்க்கவும் முயற்சிகள் நடந்தன. இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளீர்கள். திமுகவினர் இதை மறக்கக்கூடாது என ஆவேசமாக திமுக எம்பிக்களை பார்த்து கூறினார் பிரதமர் மோடி.