Connect with us

இந்தியா

நிம்மதியாக வேலை பார்ப்பது டிசிஎஸ் ஊழியர்கள் மட்டும் தான்.. இன்ப அதிர்ச்சி அறிவிப்பு..!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை உள்பட பல்வேறு காரணங்களால் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு வேலை நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு உச்சத்திற்கு சென்றது என்பதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் முன்னணி நிறுவனங்களில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததால் அந்த நிறுவனங்களில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் எந்த நேரத்திலும் நாம் வேலை நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்துடனே வேலை செய்து வருகின்றனர். ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் மட்டும் நிம்மதியாக வேலை நீக்க பயமின்றி வேலை செய்வதோடு கூடுதல் சம்பளமும் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

ஆம் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் விரைவில் ஊழியர்களின் சம்பள உயர்வை அறிவிக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரித்து மிலிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

’நாங்கள் எங்கள் ஊழியர்களின் திறமையை நம்புகிறோம் என்றும் பணி நீக்கங்கள் என்பது எங்கள் நிறுவனத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் இருக்காது என்றும் அதுமட்டுமின்றி மற்ற நிறுவனங்களில் வேலை இழந்த ஊழியர்களையும் வேலைக்கு அமர்த்த விரும்புகிறோம் என்றும் மிலிந்த் தெரிவித்துள்ளார்.

வேலை நீக்க நடவடிக்கைகளை நாங்கள் நம்புவதில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் திறமையானவர்களை வளர்ப்பதில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். வேலைநீக்க நடவடிக்கை குறித்து அவர் கூறிய போது பல நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை வேலைக்கு எடுத்ததால்தான் தற்போது பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்றும் ஒரு ஊழியரை எடுத்தால் அந்த ஊழியரின் திறமை முழுவதையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினால் வேலைநீக்க நடவடிக்கை என்பது இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு, கிளவுட் உள்பட பல அம்சங்களில் எதிர்காலத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அதற்காக திறமையானவர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் விரைவில் புதிய பணியமர்த்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி எங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளையும் விரைவில் வெளியிட இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இதனை அடுத்து உலகிலேயே டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஊழியர்கள் தான் வேலை நீக்க பயமின்றி நிம்மதியாக பணி செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

Translate »
Verlage. That difference in mindset explains why gold repeatedly attracts attention during periods of economic fear. 5 meilleures options de boîte mystère à vendre chez host liquidation que vous pouvezt manque.