Connect with us

இந்தியா

கிரிப்டோவில் முதலீடு செய்யும் ஏராளமான இளைஞர்கள்.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை..!

Published

on

இந்திய இளைஞர்கள் அதிக அளவில் கிரிப்டோவில் முதலீடு செய்து வருவதை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிப்டோவில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்ற வகையில் பலர் முதலீடு செய்தனர். ஆனால் சமீபத்தில் கிரிப்டோவின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்ததை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் இளைஞர்கள் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் கிரிப்டோவில் முதலீடு செய்து வருவதாகவும் ஒரு சிலர் நல்ல பயன்களை பெற்றிருந்தாலும் பலர் கிரிப்டோவில் முதலீடு செய்து திண்டாட்டத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஜெய்ப்பூரை சேர்ந்த வணிகவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ராகுல் என்பவர் ரூ.5000 முதலீடு செய்து ஒரு சில மாதங்களில் ரூபாய் ஒரு லட்சம் லாபம் பெற்றதாகவும் இதனை அடுத்து அவர் தனது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர்களையும் கிரிப்டோவில் முதலீடு செய்ய தூண்டியதாகவும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ராகுலின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலீடு செய்த சில மாதங்களில் மிகப்பெரிய சரிவை கிரிப்டோ சந்தித்தது என்றும் ஆதலால் அவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இது ராகுல் கதை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல இளைஞர்கள் கிரிப்டோவில் முதலீடு செய்து தங்களுடைய பணத்தையும் தங்கள் பெற்றோர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் இழந்து வருகின்றனர். இந்த நிலையில் கிரிப்டோவில் முதலில் செய்ய வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

#image_title

கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்பது குறித்து விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம் என்றும் விரைவில் பாராளுமன்றத்தில் இது குறித்த மசோதா நிறைவேறும் என்றும் கிரிப்டோ என்பது ஒரு ஆபத்தான முதலீடு என்பதை மக்களை எச்சரிக்கும் வகையில் பிரச்சாரமாக செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். ஒரு சில வரைமுறைகளை வகுத்து விரைவில் பாராளுமன்றத்தில் கிரிப்டோவுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அதுவரை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோவில் முதலில் செய்தால் ஒரு சில வாரங்களில் பல மடங்கு லாபம் பெறலாம் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் அதிக அளவில் முதலீடு செய்வது ஆபத்தானதாக முடியும் என்று எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?