வணிகம்
TCS Bench Policy: இனி 35 நாட்கள் மட்டுமே – பணிநீக்கம் அச்சத்தில் ஊழியர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான TCS, தனது ஊழியர்களுக்கான புதிய பெஞ்ச் பாலிசி கொள்கையை அறிவித்துள்ளது. இதில், ஒரு ஊழியர் எந்தவொரு திட்டத்திலும் சேராமல் 35 நாட்களுக்கு மேல் Bench-ல் இருந்தால், வேலை இழக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. இந்த முடிவு ஜூன் 12-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் முதல் சுற்று ஜூலை மாதம் முடிவடைகிறது.
இது ஊழியர்களிடையே பணிநீக்கம் நடைபெறும் என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகமாக உள்ளன. சிலர் இதை “மௌன பணிநீக்கம்” எனவும், “கட்டாய ராஜினாமா” செய்ய ஊக்குவிக்கிறார்கள் எனவும் கூறுகின்றனர். சமூக வலைதளங்களில் இதுகுறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
TCS நிறுவனம் கூறுகையில், Bench நேரத்தை புதிய திறன்கள் கற்றுக்கொள்வதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும், HR குழு திட்டம் வழங்க உதவும் என்றும் கூறியுள்ளது. ஆனால், ஊழியர் சங்கமான NITES, இது ஊழியர்களை வேலை விட்டு வெளியேற்ற ஒரு வழியாகும் என தொழிலாளர் அமைச்சகத்தில் புகார் செய்துள்ளது.
TCS CEO கே. கிருத்திவாசன் கூறுகையில், “ஊழியர்கள் தங்கள் வேலைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். HR உதவியுடன் தாங்கள் முயற்சி செய்து திட்டங்களில் சேர வேண்டும்” என்றார்.
Infosys உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் சமீபத்தில் பலரை வேலை நீக்கியுள்ளன. AI வளர்ச்சி காரணமாகவே இவை நடக்கிறது என கூறப்படுகிறது.
TCS-இன் இந்த புதிய விதிமுறை ஊழியர்களுக்கு புதிய பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது.





















