சினிமா செய்திகள்
பாலாவுடன் மீண்டும் மோதலா? அடுத்த படத்தில் கவனத்தை செலுத்தும் சூர்யா!
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த சூர்யா 41 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே முடிவடைந்தது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே முதல் வாரம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் முதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரம் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை .
அதுமட்டுமின்றி சூர்யா அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே பாலாவுக்கும் சூர்யாவுக்கு மோதல் என்றும் அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து திடீரென சூர்யா வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அதெல்லாம் வதந்தி என்றும் திட்டமிட்டபடி ’சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது சூர்யா அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தியதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அப்படி என்றால் பாலாவின் படம் டிராப்பா அல்லது சில காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதுமட்டுமன்றி விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படபடப்பையும் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.