Connect with us

இந்தியா

ஓட்டலில் வேலை செய்யும்போதே படிக்கும் இளம்பெண்.. ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த வைரல் புகைப்படம்..!

Published

on

கல்வி என்பது மிகவும் இன்றி அமையாதது என்பதும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கல்விதான் என்றும் நல்ல கல்வியை கற்றவர்கள் என்றுமே வறுமையில் வாடுவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலை செய்யும் போது கூட படிப்பில் அக்கறை இருந்தால் கண்டிப்பாக ஒரு மாணவரோ, மாணவியோ படிக்கலாம் என்று ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்ட புகைப்படம் தெரிவித்துள்ளது.

சப்வே என்ற உணவகத்தில் வேலை பார்க்கும் ஒரு இளம் பெண் வாடிக்கையாளர்கள் வருவதற்கும் செல்வதற்கும் இடையில் கிடைக்கும் நேரத்தில் புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தார். அவருடைய விடா முயற்சியை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு குமார் என்பவர் பார்த்து புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பெண் ஊழியர் ஒருவர் புத்தகத்துடன் கவுண்டருக்கு பின்னால் நின்று படித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். விடா முயற்சி உடன் வேலை செய்தாலும் படிப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் என் மனதை கவர்ந்தது என்று தெரிவித்துள்ளார். அந்த பெண் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் என்ற பகுதியில் உள்ள சப்வே என்ற உணவகத்தில் பணிபுரிகிறார் என்பது அடையாளம் காணப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து கொண்டே ஓய்வு நேரத்தில் அவர் புத்தகங்களை எடுத்து படித்துக் கொண்டிருந்தார் என்பதும் படிக்க நேரமே இல்லை என்று சொல்பவர்களுக்கு இவர் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் ஐபிஎஸ் அதிகாரி திபன்சு குமார் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

உங்களுக்கு படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் கண்டிப்பாக நேரமும் இருக்கும் என்றும் ஒரு வயதான மனிதர் என்னிடம் நீண்ட காலத்திற்கு முன்னால் பேருந்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே நான் தினமும் படித்தேன் என்று கூறியதையும் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து உள்ளார்.

இன்னொருவர் நான் 13 வயதிலிருந்து வேலை செய்து கொண்டே படித்தேன் என்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து கொண்டே படிப்பேன் என்றும் பஞ்சாபில் எனது நண்பர்கள் பலர் இப்படித்தான் வளர்ந்தார்கள் என்றும் ஆனால் நாளடைவில் அந்த வழக்கம் முற்றிலும் மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?