Connect with us

இந்தியா

2100ஆம் ஆண்டு சென்னை, கொல்கத்தா இருக்காதா.. அதிர்ச்சி தகவல்..!

Published

on

உலகம் முழுவதும் கடல் மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து கடலோர பகுதியில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்று ஆராய்ச்சிகள் கூறிவரும் நிலையில், 2100 ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்ற ஆராய்ச்சியின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் இரண்டு பெரிய மெட்ரோ நகரங்களான சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்கள் கடல் மட்ட உயர்வு காரணமாக மாபெரும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மையம் கடல் மட்டம் உயர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயற்கை ஏற்ற இறக்கங்கள் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் இதனால் கடலோரங்களில் உள்ள நகரங்கள் தாக்கத்திற்கு ஆளாகலாம் என்றும் கடல் மட்ட உயர்வை குறைப்பதற்கு விஞ்ஞானிகள் தகுந்த தீர்வு காண வேண்டும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக கடல் மட்டம் அதிகரித்து வருகிறது என்றும் சில இடங்களில் கடல் மட்டம் 20 முதல் 30 சதவீதம் வரை இன்னும் சில ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொல்கத்தா மட்டுமின்றி மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், மங்களூர் ஆகிய இந்திய நகரங்களும் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வு அதன் காரணமாக அபாயத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கான குழுவை ஐநா சமீபத்தில் அமைத்த நிலையில் புவி ஆராய்ச்சி அமைச்சகத்தின் அறிக்கையில் வட இந்திய பெருங்கடல் சுமார் 300 மீட்டர் வரை உயரும் என்று கணித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்13 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்17 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா17 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்17 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா19 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!