Connect with us

சினிமா செய்திகள்

‘பத்து தல’ படத்திற்குப் பிறகு நடக்கும் சிம்புவின் திருமணம்?

Published

on

‘பத்து தல’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

கடந்த வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடந்தது. மேலும், நேற்று இதன் பத்திரிக்கையாளர்கள் சென்னையில் கமலா திரையரங்கில் நடந்தது. இதில் நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக், சாயிஷா, இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா எனப் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Simbu’s marriage after ‘Pathu Thala’?

இதில் பேசிய படத்தின் வசனகர்த்தா ராமகிருஷ்ணா, ”இயக்குநர் கிருஷ்ணாவிடம் எப்போதும் ஒரு செண்டிமெண்ட் உண்டு. அவர் வைத்து படம் செய்கிறவர்களுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்திற்குப் பிறகு சூர்யா, ஜோதிகாவுக்கு, ‘நெடுஞ்சாலை’ படத்திற்குப் பிறகு ஆரி, ஷிவதா மற்றும் ‘பத்து தல’ படம் கமிட் ஆன பிறகு கெளதம் கார்த்திக்கு திருமணம் நடந்தது. அதுபோல, இந்தப் படம் வெளியான பிறகு சிம்புவுக்கும் அதுபோல விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்” எனப் பேசியுள்ளார். இதைக் கேட்டு மேடையிலேயே சிம்பு சிரித்தார்.

Simbu in Pathu Thala Pressmeet

இதனால், அவர் சொன்னதுபோல விரைவில் அவருக்குத் திருமணம் நடக்க இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?