Connect with us

இந்தியா

அரசு பங்களாவை காலி செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி!

Published

on

பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவதூறு வழக்கில் குற்றவாளி என வழக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யும்படி, ராகுல்காந்தி சூரத் கோர்ட்டில் மேல்முறையீடும் செய்துள்ளார். அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் இதனை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

அரசு பங்களா

ராகுல்காந்தி வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யும்படி மக்களவை செயலாளர் கடந்த 27 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசைத் தொடர்ந்து, அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.

எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்டு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்த ராகுல்காந்தி, இன்று பங்களாவை காலி செய்து வெளியேறினார். அவருடைய பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று அவர் அரசு பங்களாவில் இருந்து வெளியேறினார்.

உண்மையை பேசியதற்கான விலை

அரசு பங்களாவை காலி செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல்காந்தி, இந்திய மக்கள் இந்த வீட்டை எனக்கு 19 ஆண்டுகள் கொடுத்தனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையை பேசியதற்கான விலை இது தான். உண்மையை பேசுவதற்கு எத்தகைய விலையையும் கொடுக்க நான் தயாராக உள்ளேன் என்றார் ராகுல் காந்தி.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?