இந்தியா
பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருக்கும் மரணமடைந்த காவல் ஆய்வாளர்: அதிர்ச்சி தகவல்!
பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி என்ற மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பகவான் பிரசாத். இவர் தினமும் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடுவதை வழக்கமான கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தனது நண்பர்களுடன் அவர் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சற்று நேரம் அசையாமல் நின்று இருந்த நிலையில் திடீரென பொத்தென்று கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் வந்து அவரை தட்டி எழுப்ப முயன்றனர்.
ஆனால் அவர் தொடர்ந்து மயக்கமுற்று இருந்ததை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த காவல்துறை ஆய்வாளரின் வீடியோ தளங்களில் வைரலாகி வருகிறது.