இந்தியா
பிரதமர் மோடியின் தாய் மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம் என தகவல்!

நேற்று பிரதமர் மோடியின் சகோதரரின் குடும்பம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று மைசூர் அருகே பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர்கள் சென்ற விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரகலாத், அவரது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் காயமடைந்ததாகவும் இதனை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரதமரின் தாயாருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.