செய்திகள்
தொகுதி மறுசீரமைப்பு: முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் – நேரடி சந்திப்பு கோரிக்கை!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
மத்திய அரசு வலியுறுத்தி வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, மார்ச் 22ஆம் தேதி, தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் ஏழு மாநில தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை மாநகரில் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று (02-04-2025) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில், “ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழகத்தின் எதிர்ப்புகளையும், கவலைகளையும் விளக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனுவாக வழங்கும் திட்டம் உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

இந்தியாவும் சீனாவும் ‘நண்பர்கள், கூட்டாளிகள்’ – சீன அதிபர் சீ ஜின்பிங்

கரூர் சம்பவம்: பிரமர் மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம்!

பாம்பன் பாலம் திறப்பு: ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு – பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்!

போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை முடித்து டில்லி திரும்பினார் பிரதமர் மோடி!

என் வாழ்நாள் முழுவதும் நான் மாணவனாக இருக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு!

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தார் பிரதமர் மோடி!























