இந்தியா
15 வயது மகள் செய்த காரியம்: ஹார்ட் அட்டாக் வந்த பெற்றோர் மருத்துவமனையில் அனுமதி!
குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களுடைய 15 வயது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்தவுடன் ஹார்ட் அட்டாக் வந்து சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களுடைய 15 வயது மகளுக்கு புத்தம் புதிய ஆண்ட்ராய்டு போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் அவர் படிப்பதற்கு வசதியாக தனி அறையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போன் மூலம் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கிய அவர்களது மகள், பல்வேறு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தனி ரூமில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து உறவினர் பெண் ஒருவரின் மூலம் தகவல் தெரிய வந்ததை அடுத்து, பெற்றோர்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் 15 வயது சிறுமியை பெற்றோர்கள் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றதாகவும் அந்த சிறுமிக்கு மருத்துவர் அறிவுரை கூறியதை அடுத்து இனிமேல் அவ்வாறு செய்யமாட்டேன் தொடர்ந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.