Connect with us

வணிகம்

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்ப போறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..!

Published

on

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக பணம் அனுப்பும் பெற்றோர்கள் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் முறைக்கு டிசிஎஸ் என்ற வரி வசூல் செய்யப்படும் என்றும் அது 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தது என்பதையும் பலர் அறிந்ததே.
வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் கல்வி மருத்துவ நோக்கங்களுக்காக பணம் அனுப்புதல் ஆகிய நோக்கங்களுக்காக தவிர பிறவற்றிற்கு அனுப்பும் பணத்திற்கு இந்த வரி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் பணம் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக இருந்தால் டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும். கல்வி கடனாக இல்லாமல் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் 7 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் 5% டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போதைய புதிய வடிவின்படி வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு அதாவது கல்வி செலவு இல்லாமல் மற்ற செலவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

கடன் கல்விக்காக செய்யப்படும் செலவு உள்ளிட்ட வகைகளுக்குஅனுப்பப்படும் பணத்திற்கு டிசிஎஸ் வரி இல்லை என்றாலும் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளின் பிற செலவுக்காக அனுப்பப்படும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகள் வசதியாக விரும்பியவற்றை வாங்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இங்கிருந்து பணம் அனுப்பி வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அந்த பணத்திற்கும் வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் கல்வி கட்டணம், விடுதி செலவு ஆகியவற்றிற்காக இருந்தால் அதற்கு வரி கிடையாது. ஆனால் வெளிநாட்டில் ஆடம்பர அறைகளில் தங்குவது, அப்பார்ட்மெண்டில் தங்குவது மற்றும் பிற செலவுகள் ஆகியவை கல்விச்செலவுடன் வராது என்றும் எனவே அந்த செலவுகளுக்கு 20% டிசிஎஸ் வரி பொருந்தும் என்றும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதி வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பதால் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்பும் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற கூறப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்13 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்16 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்17 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா18 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!