Connect with us

வணிகம்

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்ப போறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..!

Published

on

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக பணம் அனுப்பும் பெற்றோர்கள் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் முறைக்கு டிசிஎஸ் என்ற வரி வசூல் செய்யப்படும் என்றும் அது 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தது என்பதையும் பலர் அறிந்ததே.
வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் கல்வி மருத்துவ நோக்கங்களுக்காக பணம் அனுப்புதல் ஆகிய நோக்கங்களுக்காக தவிர பிறவற்றிற்கு அனுப்பும் பணத்திற்கு இந்த வரி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் பணம் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக இருந்தால் டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும். கல்வி கடனாக இல்லாமல் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் 7 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் 5% டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போதைய புதிய வடிவின்படி வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு அதாவது கல்வி செலவு இல்லாமல் மற்ற செலவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

கடன் கல்விக்காக செய்யப்படும் செலவு உள்ளிட்ட வகைகளுக்குஅனுப்பப்படும் பணத்திற்கு டிசிஎஸ் வரி இல்லை என்றாலும் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளின் பிற செலவுக்காக அனுப்பப்படும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகள் வசதியாக விரும்பியவற்றை வாங்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இங்கிருந்து பணம் அனுப்பி வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அந்த பணத்திற்கும் வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் கல்வி கட்டணம், விடுதி செலவு ஆகியவற்றிற்காக இருந்தால் அதற்கு வரி கிடையாது. ஆனால் வெளிநாட்டில் ஆடம்பர அறைகளில் தங்குவது, அப்பார்ட்மெண்டில் தங்குவது மற்றும் பிற செலவுகள் ஆகியவை கல்விச்செலவுடன் வராது என்றும் எனவே அந்த செலவுகளுக்கு 20% டிசிஎஸ் வரி பொருந்தும் என்றும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதி வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பதால் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்பும் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற கூறப்படுகிறது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?