Connect with us

இந்தியா

இனிமேல் பான் கார்டு தேவையில்லையா? பட்ஜெட்டில் வருகிறது முக்கிய அறிவிப்பு!

Published

on

அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்று தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் ஒரு சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் பணம் செலுத்தினால் அல்லது வங்கியிலிருந்து பணம் பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பிக்சட் டெபாசிட் செய்யும் போதோ ஆர்டி ஆரம்பிக்கும் போது பான் கார்டு அவசியம் என அனைத்து வங்கிகளும் கூறிவருகின்றன.

மேலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நகைகள் வாங்கினாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும் என நகைக்கடைக்காரர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஒருசில பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட போவதாகவும், வரும் 2023 – 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வங்கிகளில் மோசடிகள் மற்றும் வரி ஏய்ப்புகளை தடுப்பதற்காகத்தான் பான் கார்டு எண் வழங்கப்பட்டு அந்த எண் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது அனைத்து பான் கார்டுகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டதால் ஆதார் எண் மூலமே அனைத்து விதமான பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியும் என்றும் அதனால் தனியாக பான் கார்டை கேட்பது அவசியமற்றது என்றும் கூறப்பட்டு வருகிறது.

எனவே வாரம் 2023 – 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பரிவர்த்தனைகளில் பான் கார்டு தேவை இல்லை என்று அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பான் கார்டுக்கு பதிலாக ஆதார் எண் மட்டும் பதிவு செய்தால் போதும் என்ற நிலை ஏற்படும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?