Connect with us

இந்தியா

காரில் இருந்து பணத்தை வீசும் மர்ம மனிதன்.. திரைப்படம் போலவே நடந்த பரபரப்பு சம்பவம்..!

Published

on

சமீபத்தில் மர்ம மனிதன் ஒருவர் காரில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வெளியே வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதி நடித்த பார்சா என்ற திரைப்படத்தில் கதாநாயகன் போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக கரன்சிகளை வெளியே விசுவார் என்பதும் அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் தப்பி விடுவார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஓடும் காரில் இருந்து கரன்சி நோட்டுகளை வீசி எறிந்த மர்ம மனிதர்களின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவில் உள்ள காட்சியின்படி ஒரு நபர் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறார், இன்னொரு நபர் காரின் பின்பகுதியில் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவர் மெதுவாக காரின் கதவை திறக்கிறார். அப்போது அவர் தனது வசம் உள்ள ரூபாய் நோட்டுகளை வெளியே வீசுகிறார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் கேட்டவுடன் அந்த ரூபாய் நோட்டுக்களை சேகரிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பிலும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை தற்போது காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையின் அதிகாரி ஒருவர் கூறிய போது ’பணத்தை அள்ளி வீசிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நபரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். குருகிராம் பகுதியில் உள்ள கோல்ப் மைதான சாலையில் தான் இந்த சம்பவம் நடந்தது என்பது திரைப்படத்தின் காட்சியை போல் நடந்த இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அந்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவது எப்போது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசினார்களா? அல்லது வேறு என்ன காரணத்திற்காக வீசினார்களா? என்பதையும் அவர்கள் பிடிபட்டவுடன் விசாரணையில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மர்ம மனிதனால் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளை சேகரித்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையில் அதை ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ரூபாய் நோட்டுகளில் இருந்து ஏதேனும் தடயம் கிடைக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மர்ம மனிதன் பேசிய ரூபாய் நோட்டுகளை எடுத்த பொதுமக்கள் அனைவரும் காவல் துறையில் ஒப்படைப்பார்களா என்பது சந்தேகமே.

 

 

 

சினிமா செய்திகள்10 hours ago

பையா-க்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்’னில்தான் இது நடக்கிறது: கார்த்தி

kamal
சினிமா செய்திகள்10 hours ago

மணிரத்னம் மீது பொறாமையாக உள்ளது: கமல்ஹாசன்

உலகம்10 hours ago

விவாகரத்து செய்த உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்.. மனைவிக்கு இழப்பீடாக $1 பில்லியன்..!

வேலைவாய்ப்பு11 hours ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 hours ago

17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற விமானம்.. மீண்டும் சொதப்பல்..!

Dasara Movie Review image
விமர்சனம்11 hours ago

தசரா விமர்சனம்: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு காதல் படம்!

இந்தியா11 hours ago

உலக வங்கி தலைவராக போட்டியின்றி தேர்வு.. அமெரிக்க இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

சினிமா11 hours ago

”உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை வைத்ததற்கு நன்றி”- நடிகர் சரத்குமார்!

சினிமா12 hours ago

பத்து தல விமர்சனம்: வெறித்தனம் பத்தல பத்தல!

தமிழ்நாடு13 hours ago

கொரோனா மாதிரிகளில் XBB வகை தான் அதிகம்: தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

வேலைவாய்ப்பு2 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு7 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

வேலைவாய்ப்பு3 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

42 ஆயிரம் சம்பளத்தில் CDSCO-ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு22 hours ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

NIEPMD சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!