Connect with us

இந்தியா

எல்.ஐ.சிக்கு புதிய மேனேஜிங் டைரக்டர்.. அதானியால் ஏற்பட்ட நஷ்டத்தை மீட்டு கொடுப்பாரா?

Published

on

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததால் எல்ஐசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது எல்ஐசிக்கு புதிய மேனேஜிங் டைரக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக எம் ஜெகன்நாத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் மார்ச் 13ஆம் தேதி அவர் பொறுப்பேற்றுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. மார்ச் 13ஆம் தேதி இது குறித்து வெளியான அறிவிப்பில் எம் ஜெகநாத் என்பவர் இந்திய எல்ஐசி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார் என்றும் அவர் ஓய்வு பெறும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இந்த பதவியில் அவர் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 1988 ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தில் அதிகாரியாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜெகன்நாத் எர்ணாகுளம், தார்வாட், பெங்களூர் உள்பட பல பிரிவுகளில் மூத்த கோட்டை மேலாளராக பணியாற்றியுள்ளார். 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் கொழும்புவில் உள்ள எல்ஐசியின் முக்கிய அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய ஹைதராபாத்திற்கு மத்திய எல்.ஐ.சியின் மண்டல மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் தற்போது எல்ஐசியின் நிர்வாக இயக்குனர் பதவிக்கு அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து இந்த பதவிக்கு பொறுப்பு ஏற்று உள்ளார்.

வணிகவியல் பட்டதாரியான அவர் மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ் ஆகிய துறைகளிலும் டிப்ளமா படிப்பு படித்து உள்ளார் என்பதும் மும்பையில் உள்ள இந்திய இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்டின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எல்ஐசி மேனேஜிங் டைரக்டராக இருந்த எம் ஆர் குமார் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து ஜெகன்நாத் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளதை அடுத்து அந் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் புதிதாக மேனேஜிங் டைரக்டராக பொறுப்பேற்றிருக்கும் எம் ஜெகன்நாத் என்னென்ன நடவடிக்கை ஏற்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா4 hours ago

SSMB28-வது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மகேஷ் பாபு!

சினிமா4 hours ago

விஜே சித்ரா போன்றே ஹோட்டல் ரூமில் இளம் நடிகை தற்கொலை; ரசிகர்கள் ஷாக்!

வேலைவாய்ப்பு5 hours ago

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 200

இந்தியா5 hours ago

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

வேலைவாய்ப்பு6 hours ago

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 hours ago

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

samantha
சினிமா6 hours ago

மையோசிடிஸ் பாதிப்பு: குணமடைந்தாரா சமந்தா?

சினிமா6 hours ago

’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிர்ச்சி சிவா?

சினிமா6 hours ago

’லியோ’ அப்டேட்; கெளதம் மேனனிடம் கறார் காட்டிய கெளதம் மேனன்!

ஆரோக்கியம்11 hours ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்7 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868

உலகம்7 days ago

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாக பிரிகிறதா? புதிய கடல் உருவாகிறதா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி அறிக்கை..!