Connect with us

இந்தியா

எல்.ஐ.சிக்கு புதிய மேனேஜிங் டைரக்டர்.. அதானியால் ஏற்பட்ட நஷ்டத்தை மீட்டு கொடுப்பாரா?

Published

on

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததால் எல்ஐசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது எல்ஐசிக்கு புதிய மேனேஜிங் டைரக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக எம் ஜெகன்நாத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் மார்ச் 13ஆம் தேதி அவர் பொறுப்பேற்றுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. மார்ச் 13ஆம் தேதி இது குறித்து வெளியான அறிவிப்பில் எம் ஜெகநாத் என்பவர் இந்திய எல்ஐசி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார் என்றும் அவர் ஓய்வு பெறும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இந்த பதவியில் அவர் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 1988 ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தில் அதிகாரியாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜெகன்நாத் எர்ணாகுளம், தார்வாட், பெங்களூர் உள்பட பல பிரிவுகளில் மூத்த கோட்டை மேலாளராக பணியாற்றியுள்ளார். 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் கொழும்புவில் உள்ள எல்ஐசியின் முக்கிய அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய ஹைதராபாத்திற்கு மத்திய எல்.ஐ.சியின் மண்டல மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் தற்போது எல்ஐசியின் நிர்வாக இயக்குனர் பதவிக்கு அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து இந்த பதவிக்கு பொறுப்பு ஏற்று உள்ளார்.

வணிகவியல் பட்டதாரியான அவர் மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ் ஆகிய துறைகளிலும் டிப்ளமா படிப்பு படித்து உள்ளார் என்பதும் மும்பையில் உள்ள இந்திய இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்டின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எல்ஐசி மேனேஜிங் டைரக்டராக இருந்த எம் ஆர் குமார் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து ஜெகன்நாத் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளதை அடுத்து அந் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் புதிதாக மேனேஜிங் டைரக்டராக பொறுப்பேற்றிருக்கும் எம் ஜெகன்நாத் என்னென்ன நடவடிக்கை ஏற்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?