சினிமா
இனிமே அந்த தியேட்டரில் நயன்தாரா படம் மட்டும் தான் ஓடுமா? தியேட்டரையே வாங்கிட்டாங்களாம்!

சினிமாவில் நடிப்பதை தாண்டி ஏகப்பட்ட தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. டீ கம்பெனி, கேப், காஸ்மெடிக் நிறுவனம், ரியல் எஸ்டேட் என பலவற்றில் முதலீடு செய்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி நல்ல நல்ல படங்களை தயாரித்து வருகின்றனர்.

#image_title
இந்நிலையில், வடசென்னையில் உள்ள பிரபல அகஸ்தியா தியேட்டரையே நயன்தாரா தனது நண்பர்களுடன் சேர்ந்து வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த தியேட்டரை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குள் புனரமைக்கப்பட்டு ஹைடெக் தியேட்டராக வடசென்னை ரசிகர்கள் படம் பார்க்க ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விக்னேஷ் சிவன் இந்த அனடு நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மனைவி நயன்தாராவை அழைத்துக் கொண்டு செல்லாமல் சோலோவாக சென்றுள்ளார். ஷாருக்கானின் ஜவான் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக உள்ள நயன்தாரா விரைவில் தனது 75வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் சம்பாதிக்கும் வருமானத்தை தயாரிப்பு நிறுவனம், தியேட்டர் தொழில் என செலவிடுவது ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.