சினிமா செய்திகள்
நல்ல சினிமா எடுத்தால் தமிழ் படங்கள் ஓடும்: மணிரத்னம்
நல்ல படம் எடுத்தால் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் தமிழ் படம் ஓடும் என்று பிரபல இயக்குனர் மணிரத்தினம் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் திரைப்படங்களின் வேலைகளை திட்டமிடும் புதிய மென்பொருள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் மணிரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட மணிரத்னம் கூறியதாவது:
பிற மொழி திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடுவது ஒன்றும் புதியது கிடையாது என்றும் ஏற்கனவே பல திரைப்படங்களில் ஓடி உள்ளன என்றும் தெரிவித்தார். தமிழ் நாட்டிலிருந்தும் படங்கள் இந்தி சினிமாவில் வெற்றி அடைந்து இருக்கின்றன என்றும் ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்து பார்க்கும் நாம் இப்போது தெலுங்கு கன்னட படங்களை பார்க்கின்றோம் என்றும் இது நல்ல விஷயம் தான் என்றும் தெரிவித்துள்ளார் .
தமிழ் படங்கள் மற்ற மாநிலங்களில் வெற்றி அடைவதில் தெக்கம் உள்ளதா என்றால் நல்ல படம் எடுத்தால் இந்த தேக்கம் இருக்காது என்றும் தமிழ் சினிமாவில் திறமைக்கு பஞ்சம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார் .
புதிய திறமைகள் பிறமொழிகளில் இருந்து உருவாகி இருப்பது மகிழ்ச்சி என்று மணிரத்னம் கூறினார்.