Connect with us

இந்தியா

6 வருடத்தில் ரூ.1000 கோடி வணிகம்: இறைச்சி வணிகத்தில் உச்சம் சென்ற தொழிலதிபர்..!

Published

on

இறைச்சி வணிகத்தை ஆரம்பித்து 6 வருடங்களில் ரூ.1000 ஆயிரம் கோடி வணிகம் செய்யும் அளவுக்கு உயர்ந்த இந்திய தொழிலதிபர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வளர்ந்து வரும் வேலை நீக்கம் நடவடிக்கை காரணமாக பலர் தற்போது சொந்த தொழில் செய்யவே ஆர்வம் கொண்டுள்ளனர். சொந்த தொழில் செய்தால் முதலில் ஒரு சில வருடங்கள் கடினமான காலமாக இருந்தாலும் அதன் பின்னர் தொழில் சூடு பிடித்துவிட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஐடி நிறுவனத்தில் வருடம் முழுவதும் வேலை பார்த்தாலும் கிடைக்காத வருமானம் ஒரு சில நாட்களில் தொழில் அதிபர்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவர் இறைச்சி வணிகத்தை தொடங்கி தற்போது ரூ.1000 கோடி வணிகம் செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார்.

அபய் ஹஞ்சுரா என்பவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜம்முவில் இருந்து பெங்களூர் வந்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த விவேக் குப்தா என்ற பட்டய் கணக்காளர் அவருக்கு நண்பர் ஆனார். இருவரும் தாங்கள் செய்துவரும் வேலையில் திருப்தி அடையவில்லை என்பதை உணர்ந்து கொண்டு அதன் பிறகு சொந்த தொழில் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் சொந்த நிறுவனத்தை தொடங்க இருவரும் கொஞ்சம் பயந்தாலும் அதன் பிறகு செயலி மூலம் வருங்காலத்தில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதனை அடுத்து ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று இறைச்சிகளை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் செயலியை தொடங்கினார்.

முதலில் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் தொடங்கிய இந்த நிறுவனம் தற்போது 3100 தொழிலாளர்களைக் கொண்டு விரிவடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் மாதம் ரூபாய் 80 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது என்றும் இந்நிறுவனத்தின் வருட வணிகம் ரூ.1000 கோடி என்றும் கூறப்படுகிறது.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?