Connect with us

விளையாட்டு

தோல்வியால் துவண்டு இருந்த நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷிய வீரர் மகன்: நெகிழ்ச்சியான வீடியோ!

Published

on

உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் நேற்று நள்ளிரவு பிரேசில் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற இந்த போட்டியில் பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து குரோஷி அணி வீரரின் மகன் மைதானத்திற்கு வந்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஆறுதல் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நள்ளிரவு பிரேசில் மற்றும் குரோஷிய அணிகள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் மோதியது. இந்த போட்டியில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்பதால் இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் போடவில்லை என்பதால் அடுத்ததாக பெனால்டி ஷூட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் குரோஷியா அணி நான்கு கோல்களை போட்ட நிலையில் பிரேசில் அணி இரண்டு கோல்களை மட்டுமே போட்டதால் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தனது அணியின் தோல்வி காரணமாக துவண்டு இருந்த நிலையில் அப்போது மைதானத்துக்கு வந்த குரோஷிய வீரர் விங்கர் இவான் பெரிசிச் என்பவரின் மகன் அவருக்கு ஆறுதல் கூறினார்.

தனது தந்தை உள்பட குரோஷிய வீரர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களிடம் செல்லாத அந்த சிறுவன் நெய்மருக்கு ஆறுதல் கூறியது பெரும் நிகழ்ச்சியாக இருந்தது. இதுகுறித்த த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?