Connect with us

பிற விளையாட்டுகள்

குரோஷியாவின் அரையிறுதி கனவு தகர்ப்பு.. அடுத்தடுத்து கோல்போட்டு அசத்திய அர்ஜெண்டினா!

Published

on

உலக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் காலிறுதிப் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரையிறுதி போட்டி தொடங்கியது. நேற்று நள்ளிரவு நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா ஆகிய இரண்டு அணிகள் மோதின.

முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா அணியை 6 முறை அரையிறுதிக்கு சென்ற அர்ஜென்டினா அணி மோதியதை அடுத்து அர்ஜென்டினா அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்றே போட்டிக்கு முன்பே கணிக்கப்பட்டது.

அதன்படியே நேற்று நடந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆவேசமாக கோல் அடிக்க முயற்சி செய்தனர் என்பதும் குரோஷியா ஆரம்பம் முதலே தடுப்பாட்டம் விளையாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய நிலையில் அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று குரோஷிய அணி அதிக நிமிடங்களை வேஸ்ட் செய்தது.

இந்த நிலையில் போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி சாதுரியமாக கோல் அடித்து தனது அணிக்கு ஒரு கோலை போட்டுத் தந்தார். அதன் பின்னர் அர்ஜென்டினா அணியின் ஜுவாலியன் ஆல்வரிஸ் என்பவர் 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததை அடுத்து முதல் பாதியில் அர்ஜென்டினா 2 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

முதல் பாதிக்கு பின்னர் அர்ஜென்டினா தடுப்பாட்டம் விளையாட குரோஷியா ஆவேசமாக கோல் அடிக்க முயற்சித்தது. இருப்பினும் 69 ஆவது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க குரோஷிய அணி வீரர்கள் தளர்ந்து போனார் என்பது தான் உண்மை. இறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து முதல் முறையாக இறுதிக்குள் நுழையலாம் என்ற குரோஷியாவின் கனவு தகர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு அர்ஜெண்டினா அணி தகுதி பெற்ற நிலையில் அர்ஜென்டினா ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று மதியம் நடைபெறவுள்ளது. 3வது இடத்திற்கான போட்டி டிசம்பர் 17ஆம் தேதியும் இறுதிப்போட்டி டிசம்பர் 18ஆம் தேதியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு6 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா6 hours ago

விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

சினிமா6 hours ago

‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

சினிமா6 hours ago

மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

சினிமா7 hours ago

பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

சினிமா7 hours ago

அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

இந்தியா9 hours ago

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

உலகம்9 hours ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

சினிமா10 hours ago

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாடு11 hours ago

எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!

உலகம்7 days ago

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இந்தியா7 days ago

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 days ago

சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

இந்தியா6 days ago

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சினிமா6 days ago

இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

வணிகம்6 days ago

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா (15/03/2023)!

வணிகம்7 days ago

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா(14/03/2023)!

உலகம்7 days ago

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

இந்தியா6 days ago

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!