Connect with us

கிரிக்கெட்

மகளிர் டி-20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி!

Published

on

ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

#image_title

கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணிக்கு விக்கெட் வீழ்ச்சி தொடங்கியது. அந்த அணி 13 ஓவர்களில் 68 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மூன்றாவதாக களமிறங்கிய பிஸ்மா மரூஃபும், ஆறாவதாக களமிறங்கிய ஆயிஷா நசீமும் பொறுப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய பிஸ்மா 55 பந்துகளில் 68 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக விளையாடிய ஆயிஷா நசீம் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இந்திய அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது. இந்திய சார்பில் களமிறங்கிய அனைத்து வீரங்கனைகளும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 150 ரன்கள் இலக்கை இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு எட்டியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெர்மிமா 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷஃபாலி வர்மா 33 ரன்களும், ரிச்சா கோஷ் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக விளையாடிய ஜெர்மிமா ஆட்டநாயகி விருது பெற்றார்.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?