சினிமா
‘டாடா’ படம் குறித்து கவின் நெகிழ்ச்சி!

‘டாடா’ படம் மூலம் தன்னுடைய 12 வருடக் கனவு நிறைவேறியதாக கவின் நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர்கள் கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘டாடா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ஓடிடி தளத்திலும் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கவின் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, ‘’டாடா’ திரைப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி இருக்கிறது.
திரையரங்குகளில் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தீர்கள். நல்ல கதை என்பதால் இது நிச்சயம் திரையரங்குகளில் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். இந்த வெற்றி எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. இதன் மூலம், என்னுடைய 12 வருடக் கனவும் நிறைவேறி இருக்கிறது.
இதுபோன்ற நல்ல படங்களில் நடித்து, நிச்சயம் மக்களை மகிழ்விப்பேன்’ என நெகிழ்ச்சியாக அந்த வீடியோவில் பேசியுள்ளார் கவின்.
’டாடா’ படம் பார்த்துவிட்டு நடிகர்கள் தனுஷ், கார்த்தி எனத் திரையுலகில் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.