தமிழ்நாடு
கருணாநிதி நினைவேந்தல்.. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.. பெரிய ஏற்பாடு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட இருக்கும் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல முக்கிய தலைவர்கள் வருகை தர உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த விழா பெரிய அளவில் நடக்க உள்ளது. இதற்காக இந்தியா முழுக்க முக்கிய தலைவர்கள் வர உள்ளனர்.
சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கும்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பங்கேற்கிறார்கள்.
மேலும் ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, சிபிஐஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.