Connect with us

சினிமா செய்திகள்

இந்திப் படத்தில் ஜோதிகா: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டிற்கு திரும்புகிறார்!

Published

on

தமிழ்த் திரை உலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் ஜோதிகா. இவர் தனது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்திப் படத்தில் ஜோதிகா

கடந்த சில ஆண்டுகளாக ஜோதிகாவின் நடிப்பில் 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம், ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், ராட்சசி மற்றும் உடன்பிறப்பே போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. இந்நிலையில் ஜோதிகா தற்போது இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அஜய்தேவ்கான் மற்றும் மாதவன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடைசியாக ஜோதிகா 1998 ஆம் ஆண்டு வெளியான “டோலி சாஜா கே ரக்னா” எனும் இந்திப் படத்தில் அக்ஷய் கன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அஜய்தேவ்கான் மற்றும் மாதவன் நடிக்கும் திரைப்படத்தின் மூலமாக சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தித் திரையுலகை நோக்கித் திரும்பி உள்ளார் ஜோதிகா.

இந்தப் படம் திரில்லர் படமாக தயாராகிறது. இப்படத்தை விகாஸ் பால் இயக்குகிறார். இவர் குயின், சூப்பர் 30 மற்றும் குட்பை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடக்க உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?