தமிழ்நாடு
இந்திய ராணுவம் மோடியின் சேனை: யோகியின் சர்ச்சை பேச்சுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

நாடுமுழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது என சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியினர் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள். ஆனால், மோடி தீவிரவாதிகளை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் பரிசாக வழங்குவார். இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது என்றார்.
ராணுவத்தை மோடியின் சேனை என குறிப்பிட்ட இந்த விவகாரம் பெரும் சர்சையாக வெடித்ததையடுத்து, தேர்தல் ஆணையம் யோகியிடம் விளக்கம் கேட்டது. இதனையடுத்து யோகி தனது விளக்கம் தொடர்பாக கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். ஆனால் அந்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்கு திருப்தியளிக்கும்படி இல்லை. எனவே எதிர்காலத்தில் யோகி இதுபோன்று பேசக் கூடாது எனவும், வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.




















