கிரிக்கெட்
66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் மிக அபாரமாக விளையாடி 98 ரன்கள் அடித்தார். கேஎல் ராகுல் 62 ரன்களும், க்ருணால் பாண்டியா 58 ரன்களும், விராட் கோலி 56 ரன்களும், எடுத்தனர்.
இந்த நிலையில் 318 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெயர்ஸ்டோ மிக அபாரமாக விளையாடி 94 ரன்கள் அடித்தார். ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்தார். மொயின் அலி 30 ரன்கள் எடுத்தார்
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.