கிரிக்கெட்
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்ட்டுள்ளது.
டெஸ்ட் அணி அறிவிப்பு
கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில், அணியில் அஜிங்கியா ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ரஹானே, டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் சுப்மான் கில், புஜாரா, கோலி, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
மேலும் அக்சர் படேல், சர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் உள்ளிட்டோரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அளவில் நடைபெறும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டிற்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.