Connect with us

இந்தியா

500 புதிய விமானங்கள், 100 பில்லியன் டாலர் புதிய முதலீடு.. டாடாவின் ஏர் இந்தியா அசத்தல்..!

Published

on

டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்க இருப்பதாகவும் இதற்காக 100 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கி சரியாக ஒரு ஆண்டு ஆனதை அடுத்து இந்த ஒரு ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சிறந்த சேவை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கவனிப்பு காரணமாக ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய பல பயணிகள் முன்வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமானங்களை வாங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது 500 புதிய விமானங்களை வாங்க இருப்பதாகவும் இதற்காக 100 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

250 ஏர் பஸ்கள் மற்றும் 210 போயிங் விமானங்களை வாங்க டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் ஆர்டர் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக. மேலும் A320neos மற்றும் A350 விமானங்களும் வாங்க இருப்பதாகவும், அதேபோல் 737 MAX ஜெட் விமானங்களில் 190, 20 787 அகல உடல்கள் மற்றும் 7710 7710 ஆகிய 220 போயிங் விமானங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏர்பஸ் மற்றும் ஏர் இந்தியா இடையே சமீபத்தில் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது என்று கூறப்படுகிறது. ஜனவரி 27 அன்று போயிங் விமான நிறுவனத்துடன் ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏர் இந்தியா தற்போது உலக தரம் வாய்ந்த விமானங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய இருப்பதை அடுத்து நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏர்பஸ் மற்றும் அதன் போட்டி தயாரிப்பாளரான போயிங் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் கிட்டத்தட்ட சரிவுசமான ஆர்டர்களை ஏர் இந்தியா கொடுத்துள்ளது என்பதும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா கைப்பற்றிய இந்த ஓராண்டு காலத்தில் 27 சதவீதம் விமானம் அதிகரித்து உள்ளது என்றும் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திடம் 100 விமானங்கள் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்டர் செய்துள்ள 500 விமானங்களும் படிப்படியாக டெலிவரி செய்யப்படும் என்றும் கூறப்படுவதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஏர் இந்தியாவிடம் கிட்டத்தட்ட 600 விமானங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?