Connect with us

இந்தியா

ஏர் இந்தியாவின் வித்தியாசமான அறிவிப்பு.. இதுவும் ஒருவகையில் பணிநீக்க நடவடிக்கையா?

Published

on

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இதுவும் ஒரு வகையில் பணி நீக்க நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அரசுக்கு சொந்தமான நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது என்பதும் கடந்த ரு வருடத்தில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை லாபத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏர் இந்தியா நிறுவனத்திற்காக 400க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாடா நிறுவனத்தில் ஏற்கனவே விருப்ப ஓய்வு அறிவிப்பு நடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் இதில் ஒரு சில சலுகைகளை பெற்று பலர் விருப்ப ஓய்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக டாடா நிறுவனம் விருப்ப ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விமானத்தில் பறந்து செல்லும் பணியில் இருக்கும் பைலட்டுகள் மற்றும் ஊழியர்கள், ஏர் இந்தியா அலுவலகத்தில் வேலை பார்க்கும் எழுத்தர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மார்ச் 17 முதல் ஏப்ரல் 30 வரை விருப்ப ஓய்வுக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த காலத்தில் விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு ஒருமுறை கருணைத்தொகை வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் விருப்ப ஓய்வு பணியாளர்களுக்கு கருணைத்தொகை ஒரு லட்சத்துக்கு மேல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து சுமார் 2,100 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விமானத்தில் பறக்கும் ஊழியர்கள் மற்றும் பறக்காத ஊழியர்கள் என மொத்தம் ஏர் இந்தியாவில் 11 ஆயிரம் பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து கொண்டு நிலையில் 2100 பேர் விருப்ப ஓய்வில் செல்வார்கல் என்றே கருதப்படுகிறது. இருப்பினும் இது கட்டாய விருப்ப ஓய்வு இல்லை என்றும் ஊழியர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்12 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்16 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா17 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!