Connect with us

இந்தியா

ஆண்டுக்கு ரூ.1.14 கோடி சம்பளம்.. ஐஐஎம் இந்தூர் மாணவரின் சாதனை..!

Published

on

ஐஐஎம் இந்தூரில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 1.14 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தில் படித்த மாணவர்களிலே அதிக சம்பளத்தில் வேலை பெறும் மாணவர் இவர் தான் என்ற சாதனை கிடைத்துள்ளது.
இந்தியாவிலுள்ள ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய நிறுவனங்களில் மிகப்பெரிய சம்பளத்தில் பணி செய்து வருகிறார்கள் என்பதும் அவர்கள் இறுதி ஆண்டு படிக்கும்போதே கேம்ப்ஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஐஐஎம் இந்தூரில் படித்த மாணவர்கள் சமீபத்தில் வேலை பெற்ற நிலையில் அவர்களில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.14 கோடி சம்பளம் கிடைக்கும் வேலை கிடைத்துள்ளது. இது குறித்து ஐஐஎம் அதிகாரி ஒருவர் தெரிவித்த போது ஐஐஎம் இந்தூரில் படித்த மாணவர்கள் மிக அதிகமாக 65 லட்சம் சம்பளம் பெற்ற நிலையில் தற்போது 1.14 கோடி சம்பளம் பெறும் வகையில் வேலை கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஐஐஎம் மாணவர்களின் வேலை வாய்ப்பை பொருத்தவரை சராசரியாக ரூ.49 லட்சம் சம்பளமாக பெற்று வருகிறார்கள் என்றும் கடந்த ஆண்டு 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் சேர்ந்துள்ளார்கள் என்றும் அவர்களின் சராசரி சம்பளம் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இரண்டு முதுகலை பட்டம் படித்த மாணவர்களுக்கு மிகப்பெரிய பணி கிடைத்துள்ளது என்றும் ஏராளமான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த பிஜிபி என்ற இந்த படிப்பு எம்பிஏவுக்கு சமமானதாக கருதப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்தூர் கன்சல்டிங் துறையில் 29 சதவீத வேலைகள் வழங்கப்படுவதாகவும் அதை தொடர்ந்து பொது நிர்வாகம், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். உலக தரம் வாய்ந்த கல்வியை ஐஐஎம் அளித்து வருவதை அடுத்து மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து விடுகிறது என்றும் தொழில் நிறுவனங்களுடன் எங்கள் உறவை வலுப்படுத்தி வருவதால் எங்கள் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் வேலை இழப்பு ஏற்பட்டு வரும் சவாலான இந்த நிலையில் கூட எங்கள் மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?