Uncategorized
செல்போன் ஐஎம்இஐஎண்ணை மாற்றினாலும் கண்டுபிடிக்கலாம்.
பெரும்பாலும் செல்போன் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்காது என விட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். இவ்வாறு தொலைந்து போன செல்போன்கள் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் என்பதால் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
போலீசிடம் புகார் அளித்தால் கூட செல்போனில் உள்ள ஐஎம்ஈஐ சர்வதேச சாதன அடையாள எண் மாற்றப்பட்டு விட்டால் கண்டுபிடிப்பது சிரமம் என்ற எண்ணமும் பரவலாக உள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள ‘சிஇஐஆர்’ திட்டத்தின் மூலம் தொலைந்த செல்போனின் ஐஎம்இஐ எண் சிஇஐஆர் பதிவேட்டில் பதியப்படும். இந்த ஐஎம்இஐ எண்ணில் எப்போதும் ஒரு ரகசிய குறியீடு இருக்கும்.
தொலைந்து போன போனின் ஐஎம்இஐ எண்ணை யாராவது மாற்ற முயற்சிக்கும்போது அதில் உள்ள ரகசிய குறியீடு சிஇஐஆர் பதிவேட்டிற்கு ஒரு குறுந்தகவலை அனுப்பி பதிவு செய்வதுடன் அவ்வாறு மாற்ற முயற்சிக்கும் நபரின் அப்போதைய லொக்கேஷனையும் சிஇஐஆர் பதிவேட்டிற்கு தகவலாக அனுப்பி பதிவு செய்துவிடும்.. செல்போன் தொலைந்ததாக புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்திற்கும் இந்த தகவல்களை சிஇஐஆர் அனுப்பிவிடும்.எனவே செல்போன் தொலைந்தாலும் உடனடியாக கண்டுபிடிக்க 100 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் செல்போனில் அழைப்பவரின் பெயரை அறிந்துகொள்ள பலரும் ‘ட்ரூகாலர்’ என்ற செயலியை பயன்படுத்துகின்றனர்.இதில் சம்பந்தப்பட்ட அழைப்பாளர் தனது பெயரை எப்படி பதித்துள்ளாரோ அதைத்தான் ட்ரூகாலர் செயலி காட்டும். இதனால் ED அமலாக்கத்துறை, சிபிஐ என பலரும் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தவிர்க்க மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் ‘சிஎன்பிஏ’ காலர் நேம் ஆக்சுவல் பிரசன்டேஷன் என்ற திட்டம் தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது. இதில் அழைப்பாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பெயரை பதிவு செய்ய முடியாது.
‘கேஒய்சி’ படிவத்தில் என்ன ஆதாரம் மற்றும் பெயர் கொடுத்து சிம்கார்டு வாங்குகிறோமோ அந்த பெயரைத்தான் இது காண்பிக்கும். தவிர கூடுதலாக வேறு எந்த தகவலையும் இதில் காட்டப்படாது. இந்த திட்டம் அடுத்த ஆண்டில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.இவ்வாறு சைபர் பாதுகாப்பு மைய இயக்குநர் ஈ.காளிராஜ் தெரிவித்துள்ளார்.















