இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

- பச்சை முட்டையிலிருந்து (RAW EGG) தயாரிக்கப்படும் Mayonnaise-க்கு விதிக்கப்பட்டிருக்கம் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. – சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா எடிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றம் லிஸ்டிரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரலில் இதற்க தடை விதிக்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 75064 வாக்குச்சாவடி மையங்களில் எதிலும் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- MALIGNANT BONE TUMOURS நோயால் பாதிக்கப்பட்ட yத் தொழிலாளியான பிரபாகரன் என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 5 கிலோ கட்டியை அகற்றி டைட்டானியம் உலோகத்தால் ஆன விலா எலும்பை பொருத்தி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவர்கள் சாதனை. 50% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளதாகவும் இதற்கு பல லட்சங்கள் செலவாகும் எனவும் தனியார் மருத்துவமனை கூறிய நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாகச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
- டெல்லியில் வரும் 29 ம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தின் 50வது கூட்டம் நீர்ப்பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த கூடுகிறது.
- இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பணி இழக்க நேரிடும் என அச்சம். இந்திய ரயில்வேயில் ஆட்குறைப்பு திட்டத்தின் மூலம் 29608 பேர் பணியிலிரந்து நிரந்தரமாக நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில் மட்டும் 1906 பேர் குறைக்கப்பட உள்ளதாக தகவல்.
- திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.















