இந்தியா
இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

பல ஆண்டுகளாக இந்திய மேப்பில் இலங்கையின் வரைபடத்தையும் சேர்த்தே நாம் பார்த்து வருகிறோம். ஏன் தெரியுமா? இலங்கை என்பது சுதந்திரம் பெற்ற ஒரு தனி நாடு. அதன் மேல் இந்திய அரசுக்கு எந்த ஒரு உரிமையோ அதிகாரமோ கிடையாது. பின் ஏன் இந்திய வரைபடத்தில் இலங்கையும் சேர்த்து இடம் பெற்று வருகிறது? இது ஏன் என்பது பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அது பற்றித்தான் இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்க உள்ளோம்.
இலங்கையை இந்திய வரைபடத்துடன் காட்டுவதற்கான பிரதான காரணம் சர்வதேச கடல்சார் சட்டம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இலங்கையை இந்திய வரைபடத்தில் நாம் காட்டத் தவறினால் கடல்சார் சட்டத்தை மீறிய செயலாக அது கருதப்படும். கடல் சார் சட்டம் என்பது ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்டு அணைத்து உலக நாடுகளும் தவறாது பின்பற்றி வரும் ஒரு சட்டமாகும்.
இதன்படி எந்த ஒரு நாட்டின் எல்லையும் கடலுடன் இணைக்கப் பட்டிருந்தால் அந்த நாட்டின் எல்லை கடலில் இருந்து சுமார் 200 நாட்டிக்கல் மைல் தொலைவில் அதாவது சுமார் 370 கிமீதூரம் வரை நீண்டு இருக்கும். அந்த இடத்தில் உள்ள தீவுகள் மற்றும் கட்டமைப்புக்கள் அந்த நாட்டின் வரைபடத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தியாவின் கடைசி எல்லையான தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை வெறும் 18 கிமீ தூரம்தான் உள்ளது. இதன் காரணமாக கடல் சட்டத்தின்படி இந்திய வரைபடத்தில் இலங்கையை காட்டுவது கட்டாயமாகிறது.
1956ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கடல் சார் சட்டம் தொடர்பாக நடந்த மாநாட்டில் இதற்கான முன்மொழிவை ஏற்றுக் கொண்டது. இந்த மாநாட்டில் பல நாடுகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைகள் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 1973ல் இரண்டாவது மற்றும் 1982 ல் நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில் இந்த விதிமுறைகள் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டன.
இந்த சட்டத்தின் படி இலங்கையும் அதன் வரைபடத்தில் இந்திய நாட்டின் சில பகுதிகளை தொடர்ந்து இடம் பெறச் செய்து வருகிறது.
வேதாரண்யம் கோடியக்கரை முதல் இராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் இலங்கையின் வரைபடத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.














